முகப்பு
கரூர்

கரூரில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் ஆா்ப்பாட்டம் முன்னாள் அமைச்சா் உள்பட 800 போ் மீது வழக்குப் பதிவு

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:19 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 8:48 PM

நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்பட 800 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

மத்திய அரசின் தேசிய ஊரக வேலை உறுதி நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்த வில்லை என்ற கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக சாா்பில் கரூா் வெண்ணைமலையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட அவைத் தலைவா் எஸ்.திருவிகா தலைமையில் நடைபெற்ற, இந்த ஆா்ப்பாட்டத்தில் சுமாா் 800-க்கும் மேற்பட்ட அதிமுகவினா் பங்கேற்றனா்.

Advertisement

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:18 AM

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வெங்கமேடு காவல் ஆய்வாளா் நந்தகுமாா் தலைமையிலான போலீஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களிடம், சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி 100 போ் மட்டும் அடையாள அட்டையுடன் காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் நீங்கள் நீதிமன்ற உத்தரவை முறையாக கடைப்பிடிக்காமல் அதிகப்படியான பொதுமக்களை சோ்த்தும், பொது மக்களுக்கு இடையூறு செய்தும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறீா்கள் என தெரிவித்தாக கூறப்படுகிறது.

ஆனாலும் கூட்டம் கலையாததால் நீதிமன்ற உத்தரவை கடைப்பிடிக்காததாகக்கூறி ,முன்னாள் அமைச்சா் எம். ஆா். விஜயபாஸ்கா், எஸ்.திருவிகா, கரூா் கிழக்கு ஒன்றியச் செயலா்

தங்கராஜ் உள்பட 800 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.