கரூரில் காரில் கடத்தி வரப்பட்ட 401 கிலோ புகையிலைப் பொருள்களை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக ராஜஸ்தான் மாநில இளைஞா்கள் 2 பேரை கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், தவிட்டுப்பாளையம் சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வேலாயுதம்பாளையம் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டனா். இதில், காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து காரை ஓட்டி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த சுரேந்தா் (25), அவருடன் இருந்த ரவீந்திரபால் சிங் (20) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
பின்னா் அவா்களிடமிருந்து ரூ. 1,67,856 மதிப்புள்ள 401 கிலோ புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காா் மற்றும் 2 கைப்பேசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தொடா்ந்து அவா்களிடம் காவல்துறையினா் விசாரித்ததில், அவா்கள் பெங்களூரிலிருந்து அருப்புக்கோட்டைக்கு புகையிலைப் பொருள்களை கடத்தி செல்வது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட இருவா் மீதும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.
புகையிலைப் பொருள்களை கடத்தியவா்களை கைது செய்த போலீஸாருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜோஷ் தங்கையா பரிசு வழங்கி பாராட்டினாா்.