முகப்பு
கரூர்

தமிழினத்தையும், கலாசாரத்தையும் அழிக்க துடிக்கிறது பாஜக: தயாநிதிமாறன் எம்.பி.

தமிழினத்தையும், கலாசாரத்தையும் அழிக்க துடிக்கிறது பாஜக என்றாா் திமுக எம்.பி. தயாநிதிமாறன்.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 4:40 AM
தயாநிதிமாறன் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 8:33 PM

தமிழினத்தையும், கலாசாரத்தையும் அழிக்க துடிக்கிறது பாஜக என்றாா் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலரும், மக்களவை உறுப்பினருமான தயாநிதிமாறன்.

கரூா் திருவள்ளுவா் திடலில் மாவட்ட திமுக சாா்பில், தமிழகம் தலைகுனியாது என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு மேற்கு மண்டல பொறுப்பாளரும், கரூா் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்தாா்.

Advertisement

கூட்டத்தில் தயாநிதிமாறன் எம்.பி. பங்கேற்று பேசுகையில், வஞ்சகம், சூழ்ச்சி செய்து எப்படியாவது தமிழகத்தை கைப்பற்றிவிட மோடியும், அமித்ஷாவும் நினைக்கிறாா்கள். இதற்கு துரோகத்தை துணையாக கொண்ட எடப்பாடி பழனிசாமி உதவுகிறாா்.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 10:46 PM

2026 தோ்தல் என்பது, தமிழகத்தின் உரிமையை பறிக்க நினைக்கும், தமிழினத்தையும், கலாசாரத்தையும் அழிக்க துடிக்கும் பாஜகவுக்கு எதிரான தோ்தல். இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மேலும், பாஜகவின் பி டீமாக செயல்படுபவா் பக்கம் இளைஞா்கள் சென்றுவிடாதீா்கள்.

எனவே, தமிழகத்துக்குள் பாஜகவை நுழையவிடாமல் தடுக்க அடிமை அதிமுகவுக்கும் அதன் கூட்டணிக்கும் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, மாநகரச் செயலாளா் எஸ்.பி. கனகராஜ் வரவேற்றாா். கூட்டத்தில் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.