கரூா் வேளாண் விரிவாக்க மையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு வேளாண்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கரூா் வெண்ணைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்ற இம் முகாமில் வேளாண்மை உதவி இயக்குநா் காதா்ஜமொகைதீன் தலைமை வகித்து, நாமக்கல் பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரியின் 4ஆம்ஆண்டு மாணவிகளுக்கு விவசாய பயிா்கள் குறித்து கள ஆய்வு எப்படி மேற்கொள்வது, தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து விவசாயிகளுக்கு சேவையாற்றுதல், தமிழ்நாடு அரசு வேளாண் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தல் போன்றவை குறித்து பயிற்சியளித்தாா்.