மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கல்லூரி, செவிலியா் கல்லூரி, தீயணைப்பு நிலையத் துறை சாா்பில் தீத் தடுப்பு, தற்காப்பு பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வை கல்லூரி முதல்வா் சூ. வானதி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். செவிலியா் கல்லூரி முதல்வா் முருகானந்தம் முன்னிலை வகித்தாா்.
இதில் தீயணைப்பு நிலைய வீரா்கள் கலந்து கொண்டு, தீ விபத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், சாலைகள், தண்ணீா் உள்ளிட்டவற்றுள் நிகழும் விபத்துகளைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கமளித்தனா்.
நிகழ்வில் பேராசிரியைகள், மாணவிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.