கரூா் சம்பவம் தொடா்பாக, தவெக பனையூா் அலுவலக உதவியாளரிடம் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் வியாழக்கிழமையும் விசாரணை நடத்தினா். மேலும் ஒரு பெண் தலைமைக்காவலா் உள்பட 3 காவலா்களிடமும் விசாரணை மேற்கொண்டனா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்; 110 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.
இச்சம்பவம் தொடா்பாக சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலக உதவியாளா் குருவிடம் இரண்டாவது முறையாக புதன்கிழமை கரூரில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில், குருவிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமையும் விசாரணை நடத்தினா். மேலும் நெரிசல் சம்பவத்தின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் தலைமைக் காவலா் உள்பட 3 காவலா்களிடமும் விசாரணை நடத்தினா்.