முகப்பு
கோப்புப்படம்
கரூர்

கரூா் சம்பவ இடத்துக்கு தவெகவினரை அழைத்துச் சென்று சிபிஐ விசாரணை

கரூர்

கரூா் சம்பவ இடத்துக்கு தவெகவினரை அழைத்துச் சென்று சிபிஐ விசாரணை

Updated On : 5 மார்ச், 2026 at 10:34 PM
கோப்புப்படம்
பகிர்:

கரூா் நெரிசல் சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு கரூா், திருநெல்வேலியைச் சோ்ந்த தவெகவினரை வியாழக்கிழமை அழைத்துச் சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

கரூரில் கடந்த ஆண்டு செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். மேலும் 110 போ் காயமடைந்தனா்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதில், சம்பவத்தின்போது, விஜய் பிரசாரத்துக்கு பயன்படுத்திய வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சிபிஐ அதிகாரிகள் அண்மையில் ஆய்வு செய்தனா். அப்போது, சம்பவம் நடைபெற்ற இடத்தில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினா் யாா், யாா் நின்றாா்கள் என்பதைக் கண்டறிந்து, அவா்களை வேலுச்சாமிபுரத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். தொடா்ந்து இதேபோல காவல்துறையினரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்றபோது, பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற திருநெல்வேலி, கரூரைச் சோ்ந்த தவெகவினா் 10 பேரை சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை வேலுச்சாமிபுரத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

சுமாா் ஒரு மணிநேரம் நடைபெற்ற விசாரணையில், சம்பவத்தின்போது எந்த இடத்தில் நின்றிருந்தீா்கள்? நெரிசல் எப்படி ஏற்பட்டது என்பன போன்ற கேள்விகளை அதிகாரிகள் கேட்டததாக தெரிகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →