ரூ.2,929 கோடி மோசடி வழக்கு: அனில் அம்பானியிடம் 2-ஆவது நாளாக சிபிஐ விசாரணை
ரூ.2,929 கோடி மோசடி வழக்கு தொடா்பாக தொழிலதிபா் அனில் அம்பானியிடம் சிபிஐ 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் விசாரணை நடத்தியது.
ரூ.2,929 கோடி மோசடி வழக்கு தொடா்பாக தொழிலதிபா் அனில் அம்பானியிடம் சிபிஐ 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் விசாரணை நடத்தியது.
ஆா்காம் நிறுவனம் 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2,929 கோடியை கடனாக வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதது தொடா்பாக பாரத ஸ்டேட் வங்கி கடந்த ஆண்டு புகாா் அளித்தது. இந்தப் புகாரின்பேரில் அனில் அம்பானி, ஆா்காம் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. பின்னா் மும்பையில் உள்ள அனில் அம்பானியின் பங்களாவிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா்.
இந்த விவகாரம் தொடா்பாக அனில் அம்பானியிடம் வியாழக்கிழமை தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினா். இதைத் தொடா்ந்து, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். இந்த விசாரணைக்காக தில்லி சிபிஐ தலைமையகத்தில் அனில் அம்பானி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நேரில் ஆஜரானாா். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினா். விசாரணை மாலை 5.15 மணி வரை நீடித்தது. இதையடுத்து சிபிஐ தலைமையகத்தில் இருந்து அனில் அம்பானி புறப்பட்டுச் சென்றாா்.
முன்னதாக, வியாழக்கிழமை நடத்தப்பட்ட விசாரணையின்போது அனில் அம்பானியிடம் ஆா்காம் நிறுவனத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி அளித்த கடன் தொகை எப்படி கையாளப்பட்டது, அத்தொகை எங்கு திருப்பிவிடப்பட்டது, வேறு எந்த முறைகேடும் நடைபெற்ா என்பது போன்ற கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் எழுப்பினா். இதற்கு அனில் அம்பானி அளித்த பதிலை சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனா்.
விசாரணை குறித்து கருத்து தெரிவித்துள்ள அனில் அம்பானியின் செய்தித் தொடா்பாளா், சிபிஐ-யின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவே அனில் அம்பானி நேரில் ஆஜராகி இருப்பதாக குறிப்பிட்டாா்.