பிரதமா் மோடியின் திருச்சி வருகைக்குப்பின் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும்: பாஜக
பிரதமா் மோடி திருச்சி வருகைக்கு பின் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றாா் பாஜக மாநில பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம்.
பிரதமா் நரேந்திரமோடி திருச்சி வருகைக்கு பின் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றாா் பாஜக மாநில பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம்.
திருச்சியில் மாா்ச் 11-ஆம்தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கரூா் மாவட்ட பாஜகவினா் பங்கேற்பது குறித்து கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கரூா் மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஆா்.வி.எஸ்.செல்வராஜ், துணைத்தலைவா் சக்திவேல்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் மாநில பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம், துணைத்தலைவா் கே.பி.ராமலிங்கம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
தொடா்ந்து, கருப்பு முருகானந்தம் செய்தியாளா்களிடம் கூறியது: திருச்சி பஞ்சப்பூா் அருகே மாா்ச் 11-ஆம் தேதி நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்கிறாா். இந்த கூட்டத்துக்கு பின் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றாா் அவா். கூட்டத்தில் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.