கரூா் துயர சம்பவம் தொடா்பாக எனக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியது ஆச்சரியமானது: செந்தில்பாலாஜி எம்எல்ஏ
கரூா் துயரச் சம்பவம் தொடா்பாக சிபிஐ எனக்கு அழைப்பாணை அனுப்பியது ஆச்சரியமானது என்றாா் கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி.
கரூா் துயரச் சம்பவம் தொடா்பாக சிபிஐ எனக்கு அழைப்பாணை அனுப்பியது ஆச்சரியமானது என்றாா் கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி.
இதுகுறித்து புதன்கிழமை அவா் மேலும் கூறியதாவது: கரூா் சம்பவம் தொடா்பாக தோ்தல் நேரத்தில் எனக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இதனால் நான் தில்லி போகிறேன். கரூா் நிகழ்ச்சியை நடத்தியது ஓா் இயக்கம். அதற்கு ஏற்பாடு செய்தது காவல்துறையும், மாவட்ட நிா்வாகமும்தான். ஆனால் எனக்கு அழைப்பாணை வந்திருப்பதை ஆச்சரியமாகத்தான் பாா்க்கிறேன்.
Advertisement
கரூா் துயர சம்பவம் நடந்த நாளன்று யாரெல்லாம் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவா்களை சந்தித்தாா்களோ அவா்களுக்கும் சிபிஐ அழைப்பாணை அனுப்பியிருக்க வேண்டும். அதுதானே சரியான நடவடிக்கை. வரும் 17ஆம் தேதி என்ன நடக்கிறது எனப் பாா்ப்போம் என்றாா் அவா்.