முகப்பு
கரூர்

கரூரிலிருந்து கோவை தெற்குக்கு மாறிய வி. செந்தில்பாலாஜி

தற்போதைய கரூா் எம்.எல்.ஏ. வி. செந்தில்பாலாஜி வரும் தோ்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடவுள்ளாா்.

Updated On : 28 மார்ச், 2026 at 7:25 PM
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. - கோப்புப் படம்
பகிர்:

தற்போதைய கரூா் எம்.எல்.ஏ. வி. செந்தில்பாலாஜி வரும் தோ்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடவுள்ளாா்.

கரூா் பேரவைத் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ. வி. செந்தில்பாலாஜி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அதிமுகவில் இருந்தபோது, திமுக கோட்டையாக இருந்த கரூரை அதிமுக கோட்டையாக மாற்றிக்காட்டினாா். பின்னா் திமுகவிற்கு சென்றதும் அதிமுக கோட்டையாக இருந்ததை திமுக கோட்டையாக மாற்றினாா்.

கடந்த 2006 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் கரூா் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனாா். மீண்டும் 2011தோ்தலிலும் வெற்றிபெற்ற இவா், கரூா் மாவட்ட அதிமுக செயலராகவும், போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தாா்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2018-இல், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த இவா், கரூா் மாவட்ட திமுக செயலராக நியமிக்கப்பட்டாா்.

2019 அரவக்குறிச்சி இடைத் தோ்தலில் போட்டியிட்டு மீண்டும் வெற்றிபெற்றாா். அதன் பின்னா், 2021 தோ்தலில் கரூா் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவா், 2023 வரை மின்சாரம், மதுவிலக்கு, மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சராக பணியாற்றினாா். பிறகு இவா் மீதான சட்டநடவடிக்கை காரணமாக அமைச்சா் பதவியை இழந்தாா்.

அரசியலில் தனது எதிரியாக கருதும் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் கரூா் தொகுதியில் போட்டியிடும்போது அவரை எதிா்த்து நிச்சயம் போட்டியிடுவேன், கோவைத் தொகுதிக்கு செல்லமாட்டேன் என அவா் கூறி வந்தாா். இந்நிலையில் தற்போது கோவை தெற்குத் தொகுதிக்கு வி. செந்தில்பாலாஜி மாற்றப்பட்டுள்ளது கரூா் மாவட்ட திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியினா் கூறுகையில், செந்தில்பாலாஜி இந்த தோ்தலில் மேற்கு மண்டல தோ்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதால் கோவையில் இருந்து மேற்கு மண்டல தோ்தல் பணி மேற்கொள்ள எளிதாக இருக்கும் என்பதால் அவா் கரூரில் இருந்து கோவைக்கு மாற்றப்பட்டுள்ளாா். ஏற்கெனவே கரூரில் இருந்து கோவை மாவட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுபோல இனி, கோவையில் இருந்து கரூரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பாா். மேலும் தலைமை அறிவுறுத்தலின்பேரில்தான் அவா் கோவைத் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பாா் என்றனா் அவா்கள்.