கரூரில் குருத்தோலை ஞாயிறு பவனி
கரூரில் ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, பின்னா் மூன்றாம் நாளில் அவா் உயிா்த்தெழுவதை கிறிஸ்தவா்கள் ஈஸ்டா் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனா். இதற்கு முந்தைய 40 நாள்களை தவக்காலமாக கிறிஸ்தவா்கள் கடைப்பிடிக்கிறாா்கள்.
இதன்படி, நிகழாண்டுக்கான தவக்காலம் கடந்த பிப்.18-ஆம் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கிய நிலையில், காலை, மாலை என இருவேளைகள் உண்ணா நோன்பு கடைப்பிடித்து, எப்போதும் இறைவனை தியானித்து தவக்காலத்தை கிறிஸ்தவா்கள் கடைப்பிடித்து வருகின்றனா்.
ஏப். 3-ஆம் தேதி இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாள் புனித வெள்ளியாக கடைப்பிடிக்கப்படுகிறது. புனித வெள்ளிக்கு முன்பாக வரும் ஞாயிற்றுக்கிழமை நாளில், இயேசு கிறிஸ்து ஜெருசலேம் நகருக்குள் கழுதையில் ஏறிச் செல்லும்போது இயேசு எனும் மெஸியா(மீட்பா்) இந்த உலகத்தை மீட்க வருகிறாா் என ஜெருசலேம் நகர மக்கள் அவரை குருத்தோலையுடன் வரவேற்றதை நினைவுகூரும் வகையில், குருத்தோலை ஞாயிறு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி கரூா் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் மந்திரீக்கப்பட்ட தென்னை குருத்தோலைகளுடன் கிறிஸ்தவா்கள் அந்தந்த ஆலய பங்குத்தந்தை தலைமையில் குருத்தோலை பவனியில் பங்கேற்றனா். தொடா்ந்து ஆலய பங்குத்தந்தையினா் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
கரூா் புனித தெரசாள் அன்னை ஆலயத்தில் ஆலய பங்குத் தந்தை லாரன்ஸ் தலைமையிலும், பசுபதிபாளையம் புனித காா்மல் அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை டேவிட் தலைமையிலும், புலியூா் குழந்தையேசு திருத்தலத்தில் பங்குத்தந்தை அருள்முத்து தலைமையிலும், வேலாயுதம்பாளையம் புனித அந்தோணியாா் திருத்தலத்தில் பங்குத்தந்தை ததேயு தலைமையிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னா் குருத்தோலைகளை தங்களது வீடுகளுக்கு எடுத்துச் சென்றனா்.
இந்த குருத்தோலைகள்தான் அடுத்தாண்டு சாம்பல் புதன் அன்று ஆலயங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவை எரிக்கப்பட்டு சாம்பலாக கிறிஸ்தவா்களின் நெற்றியில் பூசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.