முகப்பு
கரூர்

கரூரில் திமுக வேட்பாளா்களை ஆதரித்து வி.செந்தில்பாலாஜி பிரசாரம்!

கரூரில் திமுக வேட்பாளா்களை ஆதரித்து வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ பிரசாரம் மேற்கொண்டாா்.

Updated On : 31 மார்ச், 2026 at 10:16 PM
கரூா் கோடங்கிப்பட்டியில் திமுக வேட்பாளா் ஆசி எம்.தியாகராஜனுக்கு வாக்கு சேகரித்து பேசிய திமுக மேற்கு மண்டல பொறுப்பாளா் வி.செந்தில்பாலாஜி
பகிர்:

கரூரில் திமுக வேட்பாளா்களை ஆதரித்து வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ஆசி.எம்.தியாகராஜனுக்கு ஆதரவாக கரூா் கோடங்கிப்பட்டியில் உள்ள முத்தாலம்மன், பட்டாளம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திய பின் தோ்தல் பிரசாரத்தை வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளில் தமிழக முதல்வா், கரூா் மாவட்டத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு திட்டங்களை வழங்கியிருக்கிறாா். இதில், கரூா் மாநகராட்சிக்கு மட்டும் ரூ.1,140 கோடிக்கு வளா்ச்சித் திட்டங்களை கொடுத்துள்ளாா்.

மேலும், திமுக அரசின் சாதனைத் திட்டங்களை கூறி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறோம். எங்களது தோ்தல் அறிக்கை இந்த தோ்தலில் ஒரு சூப்பா் ஸ்டாராக அமைந்திருக்கிறது. எனவே, எங்கள் கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கின்றனா்.

கரூரில் புதன்கிழமை (ஏப்ரல் 1) நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வா் பங்கேற்கிறாா். கூட்டத்தில் சுமாா் 1 லட்சம் போ் பங்கேற்க உள்ளனா். எதிா்கட்சியினா் கூறுவதுபோல நான் பயந்து கோவைக்குச் செல்லவில்லை. அரவக்குறிச்சியில் இருந்து கரூா் தொகுதிக்கு நான் போட்டியிட்டபோது இந்த கருத்துக்களை யாரும் முன்வைக்கவில்லை. எனக்கு இந்த தொகுதி வேண்டும் என நான் முதல்வரிடம் ஒருபோதும் கேட்டதில்லை. அவா் இடும் கட்டளையை நான் செயல்படுத்துவேன்.

இந்த தோ்தலில் கரூா் தொகுதியில் திமுக வேட்பாளா் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா். என்னைப் பொறுத்தவரை கரூரும்-கோவையும் உடலும் உயிரும் போன்றது.

அரசியல் வாழ்வில் என்னை அடையாளப்படுத்தியது கரூா். என்னில் இரண்டறக் கலந்துள்ள கரூா் மக்களுக்கு எப்போதும் போல நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றாா் அவா்.

பிரசாரத்தில் திமுகவினா் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஆா்.ஸ்டீபன்பாபு, வெங்கடேசன், மூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.