பெரம்பலூர்

பெரம்பலூரில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் பேரணி

DIN

மத்திய அரசைக் கண்டித்து, பெரம்பலூரில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியினர் சனிக்கிழமை பேரணியில் ஈடுபட்டனர்.
பசுவை பாதுகாப்பதாக கூறி, முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரை
தாக்குவதையும், கொலை செய்வதை கண்டித்தும், அத்தகைய குற்றவாளிகள் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் இந்தப் பேரணிக்கு மாவட்டத் தலைவர் ஏ. முஹம்மது ரபீக் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலர் இதயத்துல்லா, மாவட்டச் செயலர் அப்துல்கனி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பாப்புலர் பிரண்ட் ஆப் ஒருங்கிணைப்பாளர் எம். அபுபக்கர், மாநில செயற்குழு உறுப்பினர் ஜே.எம். ஹசன்பாபு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பெரம்பலூர் சங்குப்பேட்டையில் தொடங்கிய பேரணி கடைவீதி, கனரா வங்கி வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஷாஜகான், ஜியாவுதீன் அகமது, பிலால், அகமது இக்பால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ. முஹம்மது பாரூக் வரவேற்றார். கே.எம். முஹம்மது ரபீக் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT