ஆலத்தூர் வட்டம், ஆதனூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாமில் 129 பயனாளிகளுக்கு ரூ. 64.67 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் ஆதனூர் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாமில், பல்வேறு துறைகள் சார்பில் 129 பயனாளிகளுக்கு ரூ. 64.67 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கி மாவட்ட வருவாய் அலுவலர் பேசியது:
ஒட்டுமொத்த சமுதாயத்தின் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டு,
பெண்களுக்காக திருமண நிதியுதவி திட்டத்துடன் 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம், இரு பெண் குழந்தைகள் திட்டம், மகளிர் சிறு தொழில் கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம், பெண்கள் சுயசார்பு வாழ்க்கை மேற்கொள்ள வழிவகை செய்வதுடன், அவர்கள் சார்ந்துள்ள சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் அடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த முகாமை முன்னிட்டு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 177 கோரிக்கை மனுக்களில், 3 மனுக்கள் ஏற்கப்பட்டது. 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதோடு, 168 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு துறைகள் முலம் 129 பயனாளிகளுக்கு ரூ. 64.67 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் அவர்
கூட்டத்தில், சமூக பாதுகாப்புத்திட்ட தனித் துணை ஆட்சியர் புஷ்பவதி, மாவட்ட பிறப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பாண்டியன், மாவட்ட வழங்கல் அலுவலர் பத்மாவதி, வேளாண்மை உதவி இயக்குநர் ராஜசேகரன், வட்டாட்சியர்கள் சீனிவாசன், ஷாஜஹான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.