பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கொளப்பாடி கிராமத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) நடைபெற உள்ளது.
முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் உடனடியாகப் பரிசீலிக்கப்பட்டு, உரிய ஆணைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு பெறப்படும் மனுக்கள் கணினியில் பதியப்பட்டு ஒப்புகை ரசீது வழங்கப்படும். உடனடியாகத் தீர்வு காண இயலாத விண்ணப்பங்களின் மனுதாரருக்கு 30 நாள்களுக்குள் பதில் தெரிவிக்கப்படும். எனவே, நல்லறிக்கை கிராமப் பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.