பெரம்பலூர்

உணவுப்பொருள்கள் புகாரை கட்செவி அஞ்சலில் தெரிவித்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை

DIN

உணவுப்பொருள்கள் குறித்த புகாரை வாட்ஸ் அப்பில் தெரிவித்தால் 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
உணவுப்பொருள்கள் குறித்த புகார் இருந்தால், அதை வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கும் வகையிலான தொலைபேசி எண் உணவுப் பாதுகாப்புத் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
பெரம்பலூர் ஆட்சியரகக் கூட்டரங்கில், அந்த வாட்ஸ் அப் எண் குறித்த அறிவிப்பு அடங்கிய விழிப்புணர்வு பதாகையை திங்கள்கிழமை வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் மேலும் பேசியது: 
பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள், உணவக உரிமையாளர்கள், மளிகைக் கடை உரிமையாளர்கள், சில்லரை வியாபாரிகள், மொத்த விற்பனையாளர்கள், காய்கறி மற்றும் பழக்கடை உரிமையாளர்கள், சாலையோரக் கடைகள், பால் விற்பனையாளர்கள், நியாயவிலைக் கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் ஆகிய உணவு வணிக நிறுவனங்களில் உணவுப்பொருள்களில் கலப்படம், தடைசெய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா விற்பனை செய்வது, உணவு தரம் குறைவாக இருத்தல், 
காலாவாதியான உணவுப்பொருள்கள் விற்பனை செய்வது, உணவு பொட்டலத்தில், இந்திய உணவுப் பாதுகாப்புத் துறையின் பதிவு, உரிமம் எண், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி அச்சிடப்படாத பொருள்கள் விற்பனை செய்தல், அதுகுறித்த புகார்களை 94440-42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம். 
நுகர்வோர் அளிக்கப்பட்ட புகார்களுக்கு 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்,டு புகார் அளித்த நபருக்கு உரிய பதில் அளிக்கப்படும். 
தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை ஆணையர், அனைத்து உணவு நிறுவனங்களிலும் தனியார் மற்றும் அரசு விடுதிகள் உள்பட வாட்ஸ் அப் எண் ஒட்டுவதற்கு உத்தரவிட்டுள்ளார். உணவு பாதுகாப்புத்துறை உரிமம், பதிவு சான்றிதழ் ஏராளமானோர் பெற்றுள்ளனர். உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற்றவர்கள் சான்றிதழை கடையின் முன்பகுதியில் நுகர்வோர் மற்றும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம், பதிவு சான்றிதழ் பெறாதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பெற  வேண்டும். 
பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மா உணவகம், ஆவின் நிறுவனங்கள், உணவுப்பொருள்கள் விற்பனை மற்றும் கொள்முதல் அதிகம் செய்பவர்கள் உணவு பாதுகாப்புத்துறையில் உரிமம் பெறுவது அவசியமாகும்.     
உணவுப் பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுச்சான்றிதழ் குறித்த விளக்கங்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 2 ஆம் தளத்தில் இயங்கும் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலரை 04328-224033 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செளமியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

SCROLL FOR NEXT