பெரம்பலூர்

கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

DIN

பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியின் 6- வது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, கடந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை 
பெற்ற மாணவிகளுக்கும், 100 சதவீத தேர்ச்சி பெற்றுத்தந்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.  பள்ளி முதல்வர் கல்யாணராமன் ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து, கேந்திரியா வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் பரத நாட்டியம், கரகம், ஒயிலாட்டம், ஆங்கில நாடகம், ஹிந்தி நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
விழாவில், அகில இந்திய வானொலி நிலையத்தின் நிர்வாக இயக்குநர் நடராஜன் உள்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபானக் கடைகளுக்கு நாளை விடுமுறை

கல்லூரி மாணவா்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியாா் பேருந்துகள் சிறைபிடிப்பு

பிரதமரைக் கண்டித்து காங்கிரஸ் மகளிரணி ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளம் பகுதியில் தொடங்கியது கொல்லாம்பழம் சீசன்: கிலோ ரூ.100க்கு விற்பனை

கழுகுமலையில் மழை வேண்டி மாணவி யோகாசனம்

SCROLL FOR NEXT