பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே தீ விபத்து

DIN

பெரம்பலூர் அருகே திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து நாசமானது.
பெரம்பலூர் அருகேயுள்ள நொச்சியம் கிராமம், தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் மருதமுத்து (56). இவரது வீட்டில் திங்கள்கிழமை நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையறிந்த முருதமுத்து உள்பட வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் வெளியே ஓடினர். தகவலறிந்து  சென்ற பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் வீட்டிலிருந்த டி.வி, பிரிட்ஜ், மிக்ஸி, கிடைண்டர், கட்டில், மெத்தை, பீரோ உள்பட ரூ. 1 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருள்கள் எரிந்து நாசமானதாம். தீ விபத்துக்கான காரணம் குறித்து, பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT