திறன் மேம்பாட்டு பயிற்சி விழிப்புணர்வு பிரசார ஊர்தி
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திறன் மேம்பாடு பயிற்சி - விழிப்புணர்வு' நடமாடும் ஊர்தியை திங்கள்கிழமை தொடக்கி வைத்து பார்வையிட்டார் ஆட்சியர் வே. சாந்தா.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திறன் மேம்பாடு பயிற்சி - விழிப்புணர்வு' நடமாடும் ஊர்தியை திங்கள்கிழமை தொடக்கி வைத்து பார்வையிட்டார் ஆட்சியர் வே. சாந்தா.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில், கிராமப்புற மாணவர்களுக்கு அளிக்கப்படும் திறன் மேம்பாடு பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் அதிநவீன எல்.இ.டி. வாகனம் மூலம் கிராமங்கள்தோறும் திரையிடப்பட உள்ளன.
மாவட்ட ஆட்சியரகத்தில் விழிப்புணர்வு ஊர்தியைத் தொடக்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார் ஆட்சியர் வே. சாந்தா.
நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொ) பெ. மணிவேல், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்கள் உதயசங்கர், மஞ்சுளாதேவி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பி. சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.