மருந்து வணிகர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்
அரியலூரில் மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM
அரியலூரில் மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் செல்வராஜ் பொருளாளர் கோபி ரத்தினம், நிர்வாக செயலர் ஆனந்தன், நிர்வாகிகள் பொன்மணி, அன்பழகன், காளிராஜா, மனோகரன் மற்றும் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வால்மார்ட் ஆன்-லைன் மூலம் மருந்து விற்பதை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.