மக்கள் சிந்தனை பேரவை ஆலோசனை
மக்கள் சிந்தனை பேரவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மக்கள் சிந்தனை பேரவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அச்சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வ. சந்திரமெளலி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நடத்துவது உள்ளிட்ட பணிகளில் பேரவையை மீண்டும் உத்வேகத்துடன் செயல்பட வைப்பது. புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது. பெரம்பலூர் மாவட்டத்தில் வருடாந்திர இலக்கிய செயல்பாடுகளை ஊக்குவிக்கும்விதமாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கதை, கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.