முகப்பு
பெரம்பலூர்

விஷம் குடித்து கல்லூரி மாணவர் சாவு

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த கல்லூரி மாணவன் விஷம் குடித்து சனிக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டார். 

Updated On : 21 மே, 2018 at 7:16 AM
பகிர்:

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த கல்லூரி மாணவன் விஷம் குடித்து சனிக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டார். 
ஆலத்தூர் வட்டம், பொம்மனப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் தனராஜ் (25). இவர், பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ படித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தனராஜ் கல்லூரிக்கு செல்லவில்லையாம். இதையறிந்த அவரது பெற்றோர் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தனராஜ், சனிக்கிழமை மாலை மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு, அங்குள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகே மயங்கிக் கிடந்தாராம். இதையறிந்த அப்பகுதியினர் மாணவனை மீட்டு, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், கொண்டு செல்லும் வழியிலேயே தனராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து நாகராஜ் அளித்த புகாரின்பேரில், பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.