இருதரப்பு வர்த்தக மேம்பாடு குறித்து இந்தியா - பிரிட்டன் பேச்சுவார்த்தை!
இந்தியா - பிரிட்டன் இடையே இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்தாலோசித்தது தொடர்பாக...
இந்தியா - பிரிட்டன் இடையே இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து வெள்ளிக்கிழமை (மே 1) கலந்தாலோசிக்கப்பட்டது.
இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பிரிட்டனின் வணிகம் மற்றும் வர்த்தகத் துறை செயலர் பீட்டர் கைல் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற காணொளிக் கூட்டத்தின் போது, இது விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து பியூஷ் கோயல் தனது எக்ஸ் தளத்தில், “இந்தியா - பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் (CETA) கீழ் உள்ள வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, நமது வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகளை நாங்கள் ஆராய்ந்தோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இந்தியாவும் பிரிட்டனும், 2025 ஜூலை 24 அன்று, விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (CETA) கையெழுத்திட்டது. இது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத் தடைகளை நீக்கி, நிர்வாக வசதிகளை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Ways to enhance bilateral trade between India and Britain were discussed on Friday (May 1).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.