FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சவூதி அரேபியா மீது ஹூதிக்கள் தாக்குதல்: இந்தியா கண்டனம்

சவூதி அரேபியா மீது யேமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல்களுக்கு இந்தியா கண்டன் குறித்து...

45 வினாடிகள் முன்பு
மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் - கோப்புப்படம்
பகிர்:

புதுதில்லி: சவூதி அரேபியா மீது யேமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய தீவிர வான்வழித் தாக்குதல்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் மற்றும் பொருளாதார உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்ட இந்தத் தாக்குதல்கள், ஒரு முக்கிய சர்வதேச கடல்வழிப் பாதையில் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்று இந்தியா கூறியுள்ளது.

சவூதியின் தெற்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள அப்ஹா, ஜஸான், நஜ்ரான் கமீஸ், முஷைத் ஆகிய நகரங்களில் உள்ள முக்கிய எண்ணெய் ஆலைகள் மற்றும் மின்சாரம் குடிநீர் போன்ற பொது விநியோகக் கட்டமைப்புகள் மீதான இந்த தாக்குதல்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 73 பேர் காயமடைந்ததாக சவூதி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

சவூதி அரேபியாவின் ராணுவ மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின்படி, இந்தத் தாக்குதல்கள் எண்ணெய் நிலையங்கள் மற்றும் பிற எரிசக்தித் துறை ஆலைகளில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த பகுதிகளில் எணணெய் உற்பத்தி மற்றும் செய்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

யேமனின் எல்லைகளைத் தாண்டி மீண்டும் மீண்டும் பரவி, முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் கடல்வழி வர்த்தகப் பாதைகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு மோதலில், இந்தத் தாக்குதல்கள் ஒரு குறிப்பிடத்தக்க தீவிரமடைதலைக் குறிக்கின்றன.

யேமனில் சவூதி தலைமையிலான கூட்டணியின் செய்தித் தொடர்பாளரான மேஜர் ஜெனரல் துர்கி அல்-மாலிகி, ஹூதிக்களின் தாக்குதல்கள் பொதுமக்கள் மற்றும் பொருளாதாரத் தளங்களைக் குறிவைத்ததாகக் கூறினார். ஆனால், இந்த தாக்குதல் மிகக் கடுமையான அத்துமீறல். இதற்கு உரிய பதிலடி நிச்சயம் கொடுக்கப்படும் என்று சவூதி தலைமையிலான கூட்டுப் படை எச்சரித்துள்ளது.

இருப்பினும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு யேமனின் ஜாவ்ஃப் மாகாண சிறைச்சாலை மீது சவூதி சமீபத்தில் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கபட்டதாக ஹூதிக்கள் கூறியுள்ளனர்.

இந்தியா கண்டனம்

சவூதி அரேபியா மீது யேமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய தீவிர வான்வழித் தாக்குதல்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் தெரிவித்துள்ள கண்டன அறிக்கையில், சவூதி அரேபியாவின் இறையாண்மைக்குட்பட்ட பகுதிகள் மீதும், பொதுமக்கள் மற்றும் பொருளாதார மையங்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களை இந்தியா கண்டிக்கிறது.

ஹோர்முஸ் நீரிணை முடக்கத்துக்குப் பிறகு சவூதி தனது கச்சா எண்ணெய்யைக் கொண்டு செல்ல மாற்று வழியாகப் பயன்படுத்தும் செங்கடல் மற்றும் "பாப் அல் மண்டேப் நீரிணைப் பகுதியில் மத்திய கிழக்கின் பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைத்து, கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் இத்தகைய தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்று கூறியுள்ளார்.

ஈரான், அமெரிக்கா மற்றும் அவற்றின் பிராந்திய கூட்டாளிகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இந்த மோதல் தீவிரமடைந்துள்ளது. இது மத்திய கிழக்கு முழுவதும் உள்ள மோதல்கள் மேலும் ஒன்றோடொன்று தொடர்புடையதாக மாறக்கூடும். இதனால் மேற்காசியாவில் போர் பதற்றம் அதிகரிக்கும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.

சவூதியின் தெற்குப் பிராந்தியம் முழுவதும் உள்ள நிலைகளை நோக்கி ஹூதிகள் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.

ஹூதிகள் இதற்கு முன்னர் சவூதி பிரதேசங்களையும், செங்கடல் மற்றும் பாப் அல் மண்டேப் நீரிணைப் பகுதிகளில் உள்ள வணிகக் கப்பல் போக்குவரத்தையும் குறிவைத்துள்ளனர். பாப் அல் மண்டேப் என்பது செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கும் ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நெருக்கடிப் பகுதியாகும், மேலும் இது உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிசக்திப் போக்குவரத்திற்கான ஒரு முக்கிய வழித்தடமாகவும் விளங்குகிறது.

summary

India has condemned the latest missile and drone attacks by Yemen’s Iran-backed Houthi movement on Saudi Arabia

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments