பெரம்பலூர்

சுமை தூக்கும் தொழிலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

பெரம்பலூர், குன்னம் மற்றும் வேப்பந்தட்டை பொது விநியோகத் திட்ட கிடங்குகளில், தற்காலிக சுமை தூக்கும் பணிக்கு தகுதிவாய்ந்த தொழிலாளர்கள் அல்லது நிறுவனம் விண்ணப்பிக்கலாம்.
பொது விநியோகத் திட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,  பெரம்பலூர் மண்டல கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பெரம்பலூர், குன்னம் மற்றும் வேப்பந்தட்டை ஆகிய கிடங்குகளில் தற்காலிகமாக சுமை தூக்கும் பணியாளர்கள் நிபந்தனைகளுக்குள்பட்டு தேவைப்படுகிறார்கள்.  
பொது விநியோகத் திட்டத்துக்கான பொருள்களை ஏற்றுவது, இறக்குவதற்கு கழகம் நிர்ணயித்துள்ள கூலி வழங்கப்படும். மேலும், பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரக்கூடாது. 
தேர்வு செய்யப்படும் தொழிலாளர்கள் தேவைப்படும் நாள்களில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேற்கண்ட நிபந்தனைக்குள்பட்ட நிறுவனமோ அல்லது தொழிலாளர்களோ அக்டோபர் 15 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் பெரம்பலூர் துணை மண்டல மேலாளரை நேரில் அணுகி மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT