பேரளியில் செப்டம்பர் 4 மின் தடை
பெரம்பலூர் மின் கோட்டத்துக்குள்பட்ட பேரளியில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (செப்.4) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பி. மாணிக்கம் வெளியிட்ட அறிக்கை: குன்னம் வட்டத்துக்குள்பட்ட, பேரளி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பேரளி, மருவத்தூர், ஒதியம், பனங்கூர், கல்பாடி, அசூர், சித்தளி, பீல்வாடி, குரும்பாபாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.