பெரம்பலூர் அருகேயுள்ள எசனை பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப். 25) மின் விநியோகம் இருக்காது.
பெரம்பலூர் மின் கோட்டத்துக்குள்பட்ட எசனை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான கோனோரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, ரெட்டைமலைசந்து, அனுக்கூர், சோமண்டாபுதூர், வேப்பந்தட்டை, பாலையூர், மேட்டாங்காடு, திருப்பெயர், கே.புதூர், மேலப்புலியூர், நாவலூர் ஆகிய கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார் உதவி செயற்பொறியாளர் டி. முத்தமிழ்செல்வன்.