பெரம்பலூர்

மருத்துவக் காப்பீடு விளக்கக் கருத்தரங்கம்

DIN

உரையாடல் எனும் அமைப்பு சார்பில், ஆயுஸ்மான் பாரத் யாருக்காக என்ற தலைப்பில், பெரம்பலூரில் சிறப்பு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
லட்சுமி மருத்துவமனை கூட்ட அரங்கில் நடைபெற்ற இக் கருத்தரங்கத்துக்கு, மருத்துவர் சி. கருணாகரன் தலைமை வகித்தார். கருத்தரங்கில், த.மு.எ.ச திருச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கவிஞர் சரவணன், இந்துத்துவ இந்திய அரசும் - தலித்திய மார்க்ஸிய அறிஞர்களும் என்னும் தலைப்பில் பேசினார். 
முன்னதாக, ஏழை மருத்துவ மாணவி கனிமொழிக்கு, மக்களுக்கான மருத்துவக் கழகம் சார்பில், ரூ. 1 லட்சம் வழங்கினார் ஓய்வுபெற்ற சுகாதாரத் துறை இணை இயக்குநர் குணகோமதி. கருத்தரங்கில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். செல்லதுரை, பேராசிரியர் ப. செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT