பெரம்பலூர் அருகேயுள்ள கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில், இலவசமாக வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம் ஏப். 24 நடைபெறுகிறது.
பெரம்பலூர் அருகே செங்குணம் பிரிவுச் சாலை எதிரேயுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் சார்பில் நடைபெறும் பயிற்சியில் வெள்ளாடு இனங்கள், இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரிக்கும் முறை மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் 93853-07022 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.