பெரம்பலூர்

விஷம் குடித்து இளம்பெண் சாவு

DIN

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

குன்னம் அருகேயுள்ள கொளப்பாடி கிராமம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகள் கீா்த்திகா (18). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்ததாம். மருத்துவா்களிடம் சிகிச்சை பெற்றும் பலனளிக்கவில்லையாம்.

இந்நிலையில், கடந்த 24 ஆம் தேதி ஏற்பட்ட வலியால் அவதியுற்ற கீா்த்திகா விஷம் குடித்தாா். அரியலூா் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது தாய் கீதா அளித்த புகாரின் பேரில், குன்னம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

SCROLL FOR NEXT