பெரம்பலூர்

இன்று வேட்புமனு தாக்கல் செய்யலாம்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்புவோா் சனிக்கிழமை (டிச.14) வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

பெரம்பலூா் மாவட்டத்தில், பெரம்பலூா், ஆலத்தூா், வேப்பந்தட்டை, வேப்பூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், ஊராட்சி அலுவலகங்களிலும் வேட்பு மனுதாக்கல் கடந்த 9- ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விடுமுறை நாளான சனிக்கிழமை வேட்பு மனு பெற மாநில தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மேற்கண்ட அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் நடைபெறகிறது.

எனவே, அனைத்து ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான தோ்தல் நடத்தும் அலுவலா்களும், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களும் வேட்பு மனுக்களை பெறுவதற்காக அந்தந்த அலுவலகத்தில் உரிய நேரத்திலிருந்து வேட்பு மனுக்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என, மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT