பெரம்பலூர்

சிறுமி பலாத்காரம்: முதியவர் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி

DIN

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே  சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர் வியாழக்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். 
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்துக்குள்பட்ட வயலப்பாடி கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (68). அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஓட்டுநர். இந்நிலையில், வியாழக்கிழமை காலை அதே பகுதியைச் சேர்ந்த 1 ஆம் வகுப்பு பயிலும் 6 வயதுள்ள சிறுமியை பலாத்காரம் செய்தாராம்.
தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் மணியை பிடித்து தாக்கியதில் மனமுடைந்த அவர் தனது வீட்டுக்குச் சென்று கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிகிறது. இதையறிந்த அவரது குடும்பத்தினர் மணியை மீட்டு அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  குன்னம் போலீஸார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT