உலக மகளிர் தினத்தையொட்டி பெரம்பலூரில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
பெரம்பலூர் ஸ்ரீசாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரோட்டரி சங்கத்தின் சார்பில், மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சு, ஓவியம் மற்றும் குழு விவாதம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளை கல்வி நிறுவனங்களின் செயலர் எம்.எஸ். விவேகானந்தன் தொடக்கி வைத்தார்.
திருச்சி காவேரி மகளிர் கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனைவர் மா. ஆசியாதாரா சிறப்புரையாற்றினார். போட்டிகளில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 300 பேர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மகளிர் தினத்தில் பரிசுகள் வழங்கப்படும்.
ரோட்டரி சங்க ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் இ. ரஞ்சனி உள்ளிட்டோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். முன்னதாக,. கல்லூரி முதல்வர் எம். சுபலட்சுமி வரவேற்றார். ரோட்டரி சங்க ஒருங்கிணைப்பாளர் ஏ. சூரியா நன்றி கூறினார்.