பெரம்பலூர்

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

DIN


அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முகேஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: .
பெரம்பலூர் மாவட்டம், கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2019- 2020 ஆம் கல்வியாண்டின் நேரடி இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு பட்டய சேர்க்கையில் நிரப்பப்படாத மீதமுள்ள காலியிடங்களை நிரப்பிட தொழில் நுட்பக் கல்வி இயக்கத்திலிருந்து அனுமதி கிடைத்துள்ளது. அதனடிப்படையில், நேரடி இரண்டாமாண்டு பட்டய சேர்க்கை ஜூலை 12 ஆம் தேதி வரையிலும், முதலாமாண்டு பட்டய சேர்க்கை 19 ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. 
விருப்பமுள்ள மாணவர்கள் நேரடியாக கல்லூரிக்குவந்து விண்ணப்பித்து சேர்க்கையை பெறலாம். அரசின் நலத் திட்டங்கள் அனைத்தையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04328-243200.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT