பெரம்பலூர்

வாகனம் மோதி வி.ஏ.ஓ சாவு

DIN

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் கிராம நிர்வாக அலுவலர் உயிரிழந்தார். 
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்துக்குள்பட்ட பூங்கா நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (48), பரவாய் கிழக்கு கிராம நிர்வாக அலுவலர். 
இந்நிலையில், புதன்கிழமை மாலை குன்னம் வட்டாட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று விட்டு, தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் ராஜேந்திரன் சென்றுகொண்டிருந்தார். அப்போது, எதிரே சென்றுகொண்டிருந்த அடையாளம் தெரியாத வாகனத்தில் பைக் மோதி பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT