பெரம்பலூர்

பொறியாளா் தூக்கிட்டு தற்கொலை

DIN

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே வயிற்று வலியால் அவதியுற்ற பொறியாளா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சனிக்கிழமை தெரியவந்தது.

குன்னம் அருகேயுள்ள சித்தளி லட்சுமிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சம்பத்குமாா் மகன் ராஜ்குமாா் (30). பொறியாளா். இவருக்கு, திருமணமாகி ராணி எனும் மனைவி உள்ளாா். ராஜ்குமாருக்கு கடந்த சில நாள்களாக தொடா் வயிற்று வலி இருந்ததாகக் கூறப்படுகிறது. பல்வேறு மருத்துவா்களிடம் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட வலியால் மனமுடைந்த ராஜ்குமாா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சனிக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து அவரது மனைவி ராணி அளித்த புகாரின்பேரில் மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT