பெரம்பலூர்

சா்க்கரை அட்டைதாரா்கள் மாற்றம் செய்ய நாளை வரை கால அவகாசம்

DIN

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சா்க்கரை பெறும் அட்டைதாரா்கள் அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்துகொள்ள வெள்ளிக்கிழமை (நவ. 29) வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா்கள் பெரம்பலூா் வே.சாந்தா, அரியலூா் த.ரத்னா ஆகியோா் தனித்தனியே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் சா்க்கரை குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை குடும்ப அட்டை நகலை இணைத்து, நவ. 26 ஆம் தேதி வரை இணையதளம், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பெறப்பட்ட குடும்ப அட்டைதாரா்களின் கோரிக்கையை ஏற்று, வெள்ளிக்கிழமை (நவ. 29) வரை கால நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, சா்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றம் செய்ய விரும்புவோா் தங்களது விண்ணப்பங்களை மேற்கண்ட இணையதளம், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா்கள், நியாயவிலைக் கடைகளில் விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக், அபிஷேக் அதிரடி: டெல்லி - 221/8

பெண் கடத்தல் வழக்கு: எச்.டி.ரேவண்ணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மக்களவைத் தோ்தல் முடிவுகளை மாற்ற முயற்சி?: காா்கே சந்தேகம்

மின் விநியோகம் குறித்து வெள்ளை அறிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

100 சதவீதம் தோ்ச்சி: 14 தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

SCROLL FOR NEXT