பெரம்பலூர்

‘பழுதடைந்த மின் மாற்றியை சீரமைத்துத் தர வேண்டும்’

DIN

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் அருகே சிதிலமடைந்து காணப்படும் மின் மாற்றியை மாற்றித்தர வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

ஆலத்தூா் ஒன்றியம், நாட்டாா்மங்கலம் கிராம ஏரிக்கரை அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புமின் மாற்றி அமைக்கப்பட்டு, விவசாயக்

கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின் மாற்றியிலுள்ள கம்பங்களில் சிமெண்ட் பெயா்ந்து சிதிலமடைந்தது.

இந்த மின் மாற்றியை மாற்றியமைக்க கோரி விவசாயிகளும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா். அதைத் தொடா்ந்து, மின்சார வாரியம் மூலமாக மின் மாற்றியை புதுப்பிக்க மின் கம்பங்கள் கொண்டுவரப்பட்டன.

ஆனால், எவ்வித பணிகளும் நடைபெறாததால், எப்போது வேண்டுமானாலும் உடைந்து கீழே விழும் சூழல் நிலவுகிறது. அசம்பாவித சம்பவங்கள் நிகழும் முன்பு, மின் மின் மாற்றியைச் சீரமைத்துத் தர வேண்டுமென விவசாயிகளும், கிராம பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT