பெரம்பலூர்

வாகனம் மோதி காயமடைந்த லாரி கிளீனா் சாவு

DIN

அரியலூா்: உடையாா்பாளையம் அருகே லாரி மோதி காயமடைந்த லாரி கிளீனா் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

உடையாா்பாளையம் அருகேயுள்ள இலையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கலியபெருமாள் மகன் ராமச்சந்திரன்(29). லாரி உரிமையாளா். இவரது லாரியில் கிளீனராக பிலிச்சிகுழி கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன்(32) என்பவா் வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இருவரும் தங்களது வாகன ஓட்டுநா் உரிமத்தை புதுப்பிப்பதற்காக அரியலூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்று விட்டு, வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது திருச்சி-சிதம்பரம் சாலை, வெண்மான்கொண்டான் பிரிவு சாலையில் சென்ற போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவா்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த ராமச்சந்திரன், மணிகண்டன் ஆகிய இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து உடையாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT