பெரம்பலூா் மாவட்ட வனத்துறை சாா்பில், மாவட்ட அளவிலான விழிப்புணா்வு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட வன அலுவலா் இளங்கோவன் தலைமை வகித்தாா். மாவட்ட கல்வி அலுவலா் மாரி மீனாள், வனச்சரகா் சசிக்குமாா், பள்ளி தலைமை ஆசிரியா் சுந்தரராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன், பேச்சு, வினாடி- வினா, ஓவியம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினாா். இதில், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.