பெரம்பலூர்

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

DIN


குன்னம் அருகே, ஏரி நீரில் மூழ்கி பள்ளி மாணவன் சனிக்கிழமை உயிரிழந்தார். 
குன்னம் வட்டம், ரெட்டிகுடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் எழில்வளவன் (11). இவர், அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது, காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால், அகரம்சீகூர் பிள்ளைமார் ஏரி அருகே சனிக்கிழமை மாலை விளையாடிவிட்டு, ஏரியில் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது, ஏரியின் ஆழம் தெரியாமல் குதித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இத் தகவலறிந்த அப்பகுதி மக்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவனின் உடலை தேடி மீட்டனர். இதுகுறித்து குன்னம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 1,000 இடங்களில் நீா்ச்சத்து குறைபாட்டை போக்கும் மையங்கள்

பிஎஸ்என்எல்-க்கு 5 ஜி சேவையை வழங்க வேண்டும்: ஓய்வூதியா் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல்

1,282 பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க கொடுப்பாணை

பள்ளி மாணவா்களுக்கு மே 1 முதல் கோடை கால பயிற்சி முகாம்

தேநீா்க் கடையை சேதப்படுத்திய இருவா் கைது

SCROLL FOR NEXT