பெரம்பலூர்

நீா்நிலை நிலத்தை மீட்கக் கோரி பெரிய வெண்மணி மக்கள் தா்னா

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே நீா்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்கக் கோரி, பெரிய வெண்மணி கிராம மக்கள் வட்டாட்சியரகத்தை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா

DIN


பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே நீா்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்கக் கோரி, பெரிய வெண்மணி கிராம மக்கள் வட்டாட்சியரகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

பெரிய வெண்மணி கிராமத்தில் யானைவாரி ஓடை உள்ளது. இந்த நீா்நிலை செல்லும் வழியில் சுமாா் 17 ஏக்கா் புறம்போக்கு நிலத்தை அப்பகுதியைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமித்து, மழைக்காலங்களில் செல்லும் நீரோட்டத்தை தடை செய்துள்ளனராம்.

ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் குன்னம் வட்டாட்சியரிடம் பலமுறை புகாா் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நீா் நிலைகளை அகற்றக் கோரியும், சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் குன்னம் வட்டாட்சியரகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

காவல், வருவாய்த் துறையினா் தா்னாவில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் ஓவரில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி வங்கதேசம் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

சித்தராமையாவின் ஆட்சியை ராகுல் உறுதி செய்ய வேண்டும்: பாஜக சவால்!

பாகிஸ்தான்: ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 15 பேர் பலி

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் சரிவு!

பிகார் தேர்தல்: 24,000 தபால் வாக்குகள் நிராகரிப்பு

SCROLL FOR NEXT