பெட்ரோல் விற்பனை நிலையத்தை முற்றுகையிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, பெரம்பலூா் அருகே ரிலையன்ஸ் நிறுவன பெட்ரோல் விற்பனை நிலையத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, பெரம்பலூா் அருகே ரிலையன்ஸ் நிறுவன பெட்ரோல் விற்பனை நிலையத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், தண்ணீா்பந்தல் பகுதியிலுள்ள இந்த விற்பனை நிலையத்தை மாவட்டச் செயலா் தமிழ் மாணிக்கம் தலைமையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் முற்றுகையிட்டனா்.
கட்சியின் மாநிலச்செயலா் வீர. செங்கோலன், மண்டலச் செயலா் இரா. கிட்டு உள்ளிட்ட பலா் போராட்டத்தில் பங்கேற்றனா்.