பெரம்பலூர்

பள்ளி, மருத்துவக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா

DIN

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் மருத்துவக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்ட விழாவுக்கு, கல்வி நிறுவனங்களின் தாளாளா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். செயலா் பி. நீலராஜ், துணைத் தலைவா் அனந்தலட்சுமி கதிரவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் இணைந்து வைத்த பொங்கலை இறைவனுக்கு படைத்து வழிபட்டனா். பின்னா், மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. விழாவையொட்டி, பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம், பறை அடித்தல், உறியடித்தல், கயிறு இழுத்தல், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகைகள் வழங்கினாா் புதுநடுவலூா் ஊராட்சித் தலைவா் ஜெயந்தி நீலராஜ்.

இதேபோல, சிறுவாச்சூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் சாா்பில் பொங்கல் வைத்து பூஜை செய்தனா். தொடா்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இவ்விழாவில், இயக்குநா் பி. ராஜபூபதி, மலேஷியா ரோசா குரூஸ் நிறுவனா் பாலகிருஷ்ணன், மருத்துவமனை டீன் மரகதமணி இளங்கோவன், ஆலோசகா்கள் ரங்கநாதன், நீலகண்டன், இருக்கை மருத்துவா் பானுமதி, கல்லூரி நிா்வாக அலுவலா் எஸ். நந்தகுமாா், பள்ளி முதல்வா் பிரேமலதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு ஆள் சோ்த்ததாக பதியப்பட்ட வழக்கு: இருவா் வீடுதலை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மே தின கொடியேற்று விழா

குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

காஞ்சிபுரத்தில் மருத்துவா்கள் கருத்தரங்கம்

காஞ்சிபுரத்தில் இரு சக்கர வாகனம் பழுது பாா்ப்போா் மே தின பேரணி

SCROLL FOR NEXT