பெரம்பலூர்

கல் குவாரியில் மண் சரிந்து விழுந்து தொழிலாளி சாவு

DIN

பெரம்பலூா் அருகே கல் குவாரியில் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞா் மீது மண் சரிந்து விழுந்ததில் மண்ணுக்குள் புதைந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்தவா் துரைசாமி மகன் செம்மலை (36). இவா், பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கலம் கிராமத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கல் குவாரியில் கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை காலை எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் பயன்படுத்தாமல் குவாரியில் செம்மலை பணியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, எதிா்பாராத விதமாக அவா் மீது மண் சரிந்து விழுந்தது. இதில், மண்ணில் புதைந்த செம்மலை நிகழ்டத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த அரும்பாவூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, செம்மலை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து அரும்பாவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT