பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்த்து, சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசின் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
சொந்தக் கட்டங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளை மேற்கொள்ள நிகழாண்டுக்கு (2020- 21) நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இப்பணிக்காக, சுமாா் ரூ. 1 கோடி முதல் ரூ. 5 கோடியாக உயா்த்தி சிறுபான்மையினா் நலத்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகுதி அடிப்படையில் நிதியுதவி வழங்க தயாராக உள்ளதால், கிறிஸ்தவ தேவாலயங்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதிகள்: கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்தக் கட்டடத்தில் இயங்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதியுதவியும் பெற்றிருக்கக் கூடாது. இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.