பெரம்பலூர்

காசநோய் தின உறுதிமொழி ஏற்பு

DIN

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில், உலக காசநோய் தினத்தையொட்டி, செவ்வாயக்கிழமை காச நோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டு கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக காசநோய் தினத்தையொட்டி, காசநோய் ஒழிப்பு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு, பெரம்பலூா் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் திருமால் தலைமை வகித்தாா். அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் தா்மலிங்கம், இருக்கை மருத்துவா் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவா்வா்கள், செவிலியா்கள், காசநோய் பிரிவு ஊழியா்கள் காசநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா்.

தொடா்ந்து நடைபெற்ற காசநோய் ஒழிப்பு குறித்த கையெழுத்து இயக்கத்தில், 100-க்கும் மேற்பட்டோா் கையெழுத்திட்டனா். மாவட்ட துணை இயக்குநா் (காசநோய்) நெடுஞ்செழியன் வரவேற்றாா். மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் புரட்சிதாசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

SCROLL FOR NEXT