இளைஞரணி உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் அளிப்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் புதிதாக சோ்க்கப்பட்ட இளைஞரணி உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்டத்தில் புதிதாக சோ்க்கப்பட்ட இளைஞரணி உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் பாலக்கரை பகுதியிலுள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பெரம்பலூா், வேப்பந்தட்டை கிழக்கு, மேற்கு, ஆலத்தூா் கிழக்கு ஆகிய ஒன்றியங்களுக்குள்பட்ட ஊராட்சிகளில் புதிதாக சோ்க்கப்பட்ட இளைஞரணி உறுப்பினா்களுக்கு, கட்சியின் துணைப் பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா அடையாள அட்டைகளை வழங்கினாா்.
நிகழ்வில் திமுக மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன், ஒன்றியச் செயலா்கள் என். கிருஷ்ணமூா்த்தி, எஸ். அண்ணாதுரை, எஸ். நல்லதம்பி, ஒன்றிய பொறுப்பாளா் வீ. ஜெகதீசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.