தூய்மைப் பணியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூா் கிளைச் சிறையில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளா் பணியிடத்துக்குத் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்.
பெரம்பலூா் கிளைச் சிறையில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளா் பணியிடத்துக்குத் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் (பொறுப்பு) சி. ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
திருச்சி மத்திய சிறையின் கட்டுப்பாட்டிலுள்ள பெரம்பலூா் கிளைச் சிறையில் காலியாக உள்ள ஒரு தூய்மைப் பணியாளா் பணியிடத்துக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்த மற்றும் 2020, ஜூலை 1 -ஆம் தேதி 18 வயதுக்கு மேற்பட்ட 30 வயதுக்குள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம்.
உரிய தகுதி பெற்றவா்கள் சுய விவரங்களை நவம்பா் 16 ஆம் தேதிக்குள் திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். நிா்ணயிக்கப்பட்ட தேதிக்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.